டிரம்ப்-கிம் இரண்டாவது சந்திப்பின் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (09:20 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில் இரு நாட்டிற்கும் இடையே போர் மூளம் அபாயங்கள் இருந்ததால் உலக நாடுகள் கவலை அடைந்தான

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார். இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே இருந்த கசப்புணர்வு நீங்கியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டிரம்ப், கிம் மீண்டும் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த சந்திப்பு குறித்த அதிகாரபூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில் டிரம்ப் மற்றும் வடகொரியார் அதிபர் கிம் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை உறுதி செய்தார். இந்த சந்திப்பு வியட்நாமில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments