Publish Date: Tue, 28 Sep 2021 (15:15 IST)
Updated Date: Tue, 28 Sep 2021 (15:18 IST)
டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் புதிய வளர்ச்சியை கண்டுள்ளது.
உலகளவில் தொழில்நுட்பத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், டிலிகிராம் உள்ளிட்ட செயலிகளைப் போல் டிக்டாக்கினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது 100 கோடிப் பேர் உலகளவில் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இதிலுள்ள சிறப்பம்சங்களே வாடிக்கையாளர்களைக் கவரக் காரண என இந்நிறுவனத்தின் சி.இ.ஒ வனீசா கூறியுள்ளார்.