இது கருணையற்ற கொலை! உணவில் விஷ மாத்திரை? - காசா மக்களை கொல்ல இஸ்ரேல் செய்த சதி!

Prasanth K
செவ்வாய், 1 ஜூலை 2025 (11:55 IST)

காசா மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை கொல்ல உணவில் ஆபத்தான மருந்துகளை கலந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது.

 

காசாவில் போர் நடந்து வருவதால் அம்மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல் படும் நிலையில் ஐ.நா உள்ளிட்ட  உலகளாவிய அமைப்புகள் உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை காசாவுக்கு வழங்கி வந்தன. சமீபத்தில் அதையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்திய நிலையில் மக்கள் உணவின்றி பட்டினியால் சாவும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அனுப்பிய நிவாரண உதவிகளை காசாவிற்குள் இஸ்ரேல் அனுமதித்தது, அவ்வாறாக வழங்கப்பட்ட சத்துமாவு உள்ளிட்ட பொருட்களில் சில மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ததில் அவை உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான மருந்துகள் என கூறப்பட்டது. நேரடியாக மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் அவர்களை நோய்களுக்கு உள்ளாக்கவும் இஸ்ரேல் நினைப்பதாக பலரும் குற்றம் சாட்டினர். 

 

தற்போது காசாவின் அல் பக்கா கடற்கரையோர உணவகப் பகுதியில் பாலஸ்தீன மக்கள் சிலர் உணவு தேடி சென்றபோது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திடதில் 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுபோல அதே பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உணவு தேடி வந்து பரிதாபமாக பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் இந்த போக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments