Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருடனுக்கு வாந்தியை ஏற்படுத்தும் புதிய பூட்டு

Advertiesment
திருடனுக்கு வாந்தியை ஏற்படுத்தும் புதிய பூட்டு
, சனி, 22 அக்டோபர் 2016 (19:29 IST)
மோட்டார் சைக்கிளை திருடுபவருக்கு தொடர்ந்து வாந்தியை ஏற்படுத்தும் புதிய பூட்டு தாயாரிக்கப்பட்டுள்ளது.


 

 
மோட்டார் சைக்கிளை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க பல்வேறு தொழில்நுட்பங்களுடன் பூட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதுவிதமான பூட்டு தாயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூட்டை கொண்டு பூட்டிய மோட்டார் சைக்கிளை திருடுபவர்களுக்கு வாந்தியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூட்டை கள்ளச்சாவி கொண்டு திறந்தாலோ அல்லது உடைத்தாலோ, ஒருவிதமான கேஸ் வெளிப்படும்.
 
அந்த கேஸ் கடுமையான நெடியுடன் வெளிவரும் போதும் அதை சுவாசிப்பவர்களுக்கு வாந்தி மற்றும் பலவித உடல் கோளாறுகள் ஏற்படும். மேலும் இந்த பூட்டை அவ்வளவவு எளிதில் உடைத்து விட முடியாது.
 
இந்த புதுவிதமான பூட்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்ப்கோவை சேர்ந்த இட்ஸ்கோவ்ஸ்கி மற்றும் அவரது நண்பரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மோட்டார் சைக்கிள் திருடு போவதை கட்டாயமாக தடுக்க முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலூன்களுக்கு தடை: கேஸ் பலூன் வெடித்து 31பேர் படுகாயம்