Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொசுவின் ரத்தம் மூலம் திருடனைப் பிடித்த போலீஸார்

கொசுவின் ரத்தம் மூலம் திருடனைப் பிடித்த போலீஸார்
, செவ்வாய், 19 ஜூலை 2022 (22:26 IST)
சீனாவில் இறந்து கிடந்த கொசுக்களின் டி.என்.ஏ.மூலமாக 19 நாட்கள் கழித்து திருடர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஃபுஜோவில் கடந்த 11 ஆம் தேதி யோரு வீட்டில் பல விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுபோனது. அங்குள்ள சமையலறையில், முட்டை ஓடுகள் மற்றும் நூடுல்ஸ் இருப்பதைக் கண்டுபிடித்த போலீஸார் திருடன் அன்றிரவு அங்கிருப்பதை உறுதி செய்தனர்.

மேலும், அந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட கொசுவர்த்திச் சுருளும் அதன் அருகில்  இரண்டு கொசுக்கள் இரந்து கிடந்தன. அதில் ரத்த மாதிரிகளை சுவரில் இருந்து பிரித்து எடுத்து,  டி.என்.ஏ ஆய்வுக்கு அனுப்பிய போலீஸார் சாய் என்ற குடும்பப் பெயரில் குடும்பத்தைச் சேர்ந்த குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு: இன்று எவ்வளவு?