Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானில் மருத்துவரை தாக்கிய கிளியின் உரிமையாளருக்கு ரூ.74 லட்சம் அபராதம்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (21:28 IST)
தைவான் நாட்டில் ஒரு மருத்துவமனை காயப்படுத்திய கிளியின் உருமையாளருக்கு பல லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் வசிப்பவர் ஹூவாங். இவர் தன் வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தக் கிளி மற்ற கிளிகளைப் போல் இல்லாமல், 40 செ.மீ உயரம், 60 செ.மீ இறக்கைகளுடன் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு ஹூவாங், தன் கிளியை பூங்காவிற்விற்கு அழைத்துச் சென்றிருந்தார்.  அதே பூங்காவிற்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அந்தக் கிளி பறந்து சென்று, மருத்துவரின் முதுகில் அமர்ந்து, சிறகுகளை அசைத்து அவரை கீழே விழுபடி செய்தது.

இதில், மருத்துவர் படுகாயம் அடைந்து, இடுப்பு எலும்பு முறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரால் பணிக்குச் செல்ல முடியவில்லை. இந்த  நிலையில்,  வருமானம் பாதிக்கப்பட்ட மருத்துவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹூவாங்கிற்கு 2 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.74 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக  ஹூவாங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments