Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை அடுத்து தீவிரமாக பரவும் ஹண்டா வைரஸ்: இதுவும் சீனாவில் இருந்தா?

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (17:32 IST)
கொரோனா வைரஸ் அச்சத்தில் இருந்தே இன்னும் மனிதகுலத்தை காப்பாற்றா மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் மனித உயிர் இந்த வைரஸால் பலியாகி  வருகிறது.
 
இந்த நிலையில் சீனாவில் ஹண்டா  என்னும் புதிய வைரஸால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய சமூக வலைத்தளத்தில் ஹண்டா வைரஸ் தான் டிரெண்டிங்
 
பலியான நபர் சீனாவை சேர்ந்தவர் என்பதால் இந்த வைரஸூம் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவுமோ என்ற அச்சம் தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் பயப்படும் அளவுக்கு ஹண்டா வைரஸ் சீரியஸ் ஆனது இல்லை என்றும் இந்த வைரஸ் 1976ல் இருந்தே உள்ளது என்றும் இது எலி மூலம் உருவாகும் வைரஸ் என்றும் இதுவொரு தொற்று வைரஸ் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மீண்டும் ஒரு புதிய வைரஸ் குறித்து யாரும் வதந்திகள் கிளப்பி மக்களை பீதியடைய செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments