Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை.. ஈரான் செய்த பாவத்தால் பழிவாங்கப்படுகிறதா?

Advertiesment
hang

Siva

, வியாழன், 19 ஜூன் 2025 (07:22 IST)
ஈரான் - இஸ்ரேல் மோதல் ஆறாவது நாளாக தொடர்வதால், மத்திய கிழக்கு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களில் 585 பேர் கொல்லப்பட்டும், 1,326 பேர் காயமடைந்தும் உள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. பல அணு விஞ்ஞானிகளும், ராணுவ அதிகாரிகளும் வான்வழி தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
 
இந்த பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், பல ஆண்டுகளுக்கு முன் உலகை உலுக்கிய 16 வயது சிறுமி அடெஃபே சஹாலாஹ்வின் சோகக்கதை சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. "ஓர் அப்பாவி குழந்தையின் ஆவியால் ஈரான் சபிக்கப்பட்டுள்ளது" என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
 
அடெஃபே ஒரு ஆணுடன் பாலியல் உறவு கொண்டதாக ஈரானின் மத ஒழுங்கு காவல்துறை குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.
 
அடெஃபேவின் தாய் சாலை விபத்தில் இறந்துவிட்டார். தந்தை போதைக்கு அடிமையானதால், அவர் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார். பாசம் நிறைந்த ஓர் உறவுக்காக ஏங்கியதாக உளவியல் அறிக்கை கூறியது. 
 
ஈரானியச் சட்டப்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. ஆனால், பிபிசி ஆவணப்படம் ஒன்றின்படி, அடெஃபேவுக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பை கொண்ட நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, ஆவணங்களை திரித்து அவரது வயதை 22 என்று குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றினார்.
 
அந்த சிறுமியின் பாவம் தான் தற்போது ஈரானை பழிவாங்கி வருகிறது என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை சந்தித்ததால், எங்கள் சங்கத்தை உடைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்: அதிர்ச்சி குற்றச்சாட்டு..!