Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

Advertiesment
Semmani Burial Ground

Prasanth K

, திங்கள், 9 ஜூன் 2025 (13:30 IST)
Semmani Burial Ground
 

இலங்கையில் யாழ்பாணம் அருகே மேற்கொள்ளப்பட்ட புதைக்குழி அகழ்வாய்வில் ஒரு குழந்தை உட்பட 19 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

இலங்கையில் ஈழத் தமிழர்கள் - சிங்களத்தார் பிரச்சினையில் பல ஆண்டுகளாக போர் நடந்து வந்த நிலையில் ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதில் பலர் எங்கே வைத்துக் கொல்லப்பட்டனர் என்பது கூட தெரியாத நிலையில், அவர்களது சடலங்கள் கிடைக்காததால் காணாமல் போனவர்களாகவே கருதப்படும் நிலை உள்ளது.

 

இந்நிலையில் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள செம்மணி பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வில் பல எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாக செம்மணியில் ஈழத் தமிழர்கள் நூற்றுக் கணக்கில் புதைக்கப்பட்டதாக 1998ல் இலங்கை ராணுவ வீரர் ஒருவர் அளித்த சாட்சியத்தின் பேரில் தோண்டியபோது பல எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அப்பகுதியில் நீண்ட காலத்திற்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2 வாரமாக நடத்தப்பட்டு வந்த அகழ்வாய்வில் ஒரு சிறு குழந்தை உட்பட 19 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவை ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்களா என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!