Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (14:04 IST)
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் திருமணம் நடந்த நிலையில் அடுத்த 18 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் ஹார்போர்ட் நகரில் வசித்து வருபவர் டேவிட் மோஷர் (35). இவரும் ஹீத்தர் லிண்ட்சே (31) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒரு சமயத்தில் இவ்விருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 23-ஆம் லிண்ட்சேவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது லிண்ட்சேவுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தெரியவந்தது. 
 
ஆனாலும் தனது காதலில் இருந்து டேவிட் பின் வாங்கவில்லை. லிண்ட்சே தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் புற்றுநோய் அவரின் மூளை மற்றும் நுரையீரலுக்கு பரவியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் லிண்ட்சே தனது கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதையடுத்து மருத்துவமனை படுக்கையில் படுத்தபடியே டேவிடை லிண்ட்சே திருமணம் செய்து கொண்டார். இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண் கலங்கினார்கள். திருமணம் நடந்த அடுத்த 18 மணி நேரத்தில் லிண்ட்சே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் காதலர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments