Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை; எடப்பாடி பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (13:31 IST)
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் ஓராண்டாக தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களும் பெரும் அவமானம் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலில் இறங்குகிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments