Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புகழுக்கு ஆசைப்பட்டு .. அழகிய கூந்தலை இழந்த பெண்...

புகழுக்கு ஆசைப்பட்டு .. அழகிய கூந்தலை இழந்த பெண்...
, புதன், 16 அக்டோபர் 2019 (21:21 IST)
துருக்கி நாட்டில் ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து ஒரு பெண்ணின் 12 அங்குள கூந்தலை ஒருவர் வெட்டியதால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், மேடையிலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் கைகள் தங்கள் அழகிய கூந்தலை நிமிடத்திற்கு ஒருமுறையேனும் தொட்டுப் பார்த்து மகிழ்வார்கள். அது அவர்களுக்கு பெருமையும் கூட. 
 
இந்நிலையில் துருக்கி நாட்டில் ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருந்தது. அதில், அழகுகலை நிபுணர்கள்  நிகழ்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மேக் அப் செய்து நிகழ்ச்சிக்கு முன் எப்படி இருந்தனர். நிகழ்சிக்கு பின்னர் எப்படி இருந்தனர் எனக் காட்டுவர்.
 
இந்நிலையில் இலைடா என்ற ஒரு பெண் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அழகுகலை நிபுணர் இலைடாவின் கூந்தலில் 12 அங்குள அளவுக்கு வெட்டி எடுத்தார். இதனால அதிர்ச்சியடைந்த இலைடா மயங்கி விழுந்தார். பின்னர் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். 
 
https://www.facebook.com/Turkishisms/videos/493164611240485/

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவியல்ரீதியிலான உலக அழகி: பிரபல மாடல் அழகி தேர்வு