Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குச்சி ஐஸுக்குள் குடியிருந்த குட்டிப்பாம்பு! வாங்கி சாப்பிட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Prasanth Karthick
வெள்ளி, 7 மார்ச் 2025 (11:29 IST)

ஆசையாய் வாங்கிய ஐஸில் விஷம் வாய்ந்த குட்டி பாம்பு இருந்ததை ஒருவர் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ள நிலையில் அது வைரலாகியுள்ளது

 

அன்றாடம் கடைகளில் வாங்கி உண்ணும் உணவுகளில் மோசமான விஷயங்கள் கண்டெடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தாய்லாந்திலும் நடந்துள்ளது. தாய்லாந்தை சேர்ந்த ரேபன் நெக்லங்பூன் என்ற நபர் அங்குள்ள வண்டிக்கடை ஒன்றில் ப்ளாக் பீன் குச்சி ஐஸை வாங்கியுள்ளார். அதன் மேல் பகுதி உருகியபோது அதற்குள் பாம்புக்குட்டி ஒன்றின் தலை தெரியவே அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

தொடர்ந்து ஐஸ் உருகியபோது அந்த பாம்பு முழுவதுமாக ஐஸுக்கும் உறைந்து இருந்தது தெரிய வந்துள்ளது. அதை அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். விஷம் வாய்ந்த அந்த பாம்பு குச்சி ஐஸ் செய்யும் டையில் விழுந்தது கவனிக்கப்படாமல் அது தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments