Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

Advertiesment
Ukraine War

Siva

, புதன், 28 மே 2025 (09:21 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது உக்ரைன் எல்லையில் உள்ள நான்கு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த போரை நிறுத்த அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்த போதிலும், இரு நாடுகளும் தொடர்ந்து போரை நடத்தி வருகின்றன என்பதும், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள சுமி என்ற பகுதியில் நான்கு எல்லையோர கிராமங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாகவும், அந்த கிராமங்களில் உள்ள மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் நாட்டை முழுவதுமாக கைப்பற்றுவதுதான் ரஷ்யாவின் எண்ணமாக இருக்கிறது என்று, ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், தற்போது படிப்படியாக உக்ரைன் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வருவது, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!