Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

Siva
வியாழன், 1 மே 2025 (19:04 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
 
நேற்றுடன் 786 பாகிஸ்தானியர்கள் வாகா எல்லை வழியாக அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், திடீரென பாகிஸ்தான் தனது சொந்த குடிமக்களை திரும்ப பெற மறுத்துவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வாகா எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இந்தியாவில் இருந்து வரும் பாகிஸ்தான் குடிமக்களை அனுமதிக்காமல், எல்லையில் உள்ள வாசலை பாகிஸ்தான் மூடியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதன் காரணமாக, இந்தியாவுக்கும் செல்ல முடியாமல், பாகிஸ்தானுக்கும் செல்ல முடியாமல், எல்லையில் பலர் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர். பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், எல்லை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments