Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காபூல் விமான நிலையத்தை சீல் வைத்த தாலிபான்கள்!

காபூல் விமான நிலையத்தை சீல் வைத்த தாலிபான்கள்!
, ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (12:12 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் தாலிபான்களுக்கு அச்சப்பட்டு கொண்டு உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர்
 
இதனால் காபூல் விமான நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை படைத் தாக்குதல் காரணமாக சுமார் 190 பேர் பலியாகினர் என்பதும் அதில் 13 பேர் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தை தாலிபான்கள் தற்போது சீல் வைத்துள்ளனர். இதனால் உள்நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் தரை மார்க்கமாக பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வீடியோ! தாய் மீது வழக்குப்பதிவு!