Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானியர்கள் நாடு திரும்ப வேண்டும் - தாலிபன் பிரதமரின் முதல் உத்தரவு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:23 IST)
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமர் முல்லா ஹஸன் அகுந்த் தனியார் தொலைக்காட்சி வாயிலாக பேட்டி அளித்துள்ளார். 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சி வாயிலாக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது... 
 
ஆப்கானில் நல்லாட்சியை ஏற்படுத்த தாலிபான் அமைப்பு பெருமளவு பொருள் மற்றும் உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. தற்போது ஆப்கானை நல்வழியில் நடத்த நாங்கள் (தாலிபன்கள்) முயற்சித்து வருகிறோம். எனவே, நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும்.
 
பொதுமக்கள் இனி ரத்தம் சிந்தும் நிலை முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அரசாங்கத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments