Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் சிரியா தாக்குதல்; 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (12:55 IST)
சிரிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில்,  சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே  சண்டை நடைபெற்று வருகிறது.  இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. 
 
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். 
 
இந்நிலையில் சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியின் 'டவுமா' நகரில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ராணுவத்தினர் வான்வழி தாக்குதலை நடத்தினர். இந்த வான்வழித் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுக்கும் ராமதாஸ் - அன்புமணி மோதல்! பேச்சுவார்த்தை நடத்த உடனே வர சொன்ன நீதிபதி!

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments