Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடிகை போல் இருப்பதாக கூறிய கணவர் மீது மனைவி போலீசில் புகார்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (12:51 IST)
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தன்னுடைய கணவர் தன்னை ஆபாச நடிகை போல் இருப்பதாக கூறி டார்ச்சர் செய்வதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்த ஒருபெண் கந்தராஜ் என்பவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கந்தராஜினி மனவி சமீபத்தில் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், 'தன்னுடைய கணவர் தன்னை அடிக்கடி ஆபாச நடிகை போல் இருப்பதாக டார்ச்சர் செய்வதாகவும், மேலும் கணவரின் நடவடிக்கையில் சில மாதங்களாக மாற்றம் தெரிவதாகவும், அவர் இன்னொரு இளம் பெண்ணை தனக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் தன்னை அடிக்கடி ஆபாச படத்தையும் பார்க்க வைத்து கொடுமைப்படுத்துவதகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் அவர் கூறியுள்ளார். இந்த புகாரின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்