Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதமாக சூரியன் மறையாத தீவு:அதிசயம் ஆனால் உண்மை

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (12:49 IST)
வடக்கு நார்வே நாட்டில் அமைந்துள்ள ஒரு தீவில் கடந்த ஒரு மாதமாக சூரியன் மறையாமல் இருந்துவருவது ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருக்கிறது.

ஐரோப்பா கண்டத்தின் நார்வே நாட்டில் அமைந்துள்ளது மேற்கு ட்ரோம்சோ தீவு. இந்த தீவு ஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

ஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளதால், நார்வே நாட்டின் மேற்கு பகுதிகளில் 60 நாட்கள் பகலாகவும், 60 நாட்கள் இரவாகவும் இருக்கும்.

இந்நிலையில் மேற்கு ட்ரோசோ தீவில் கடந்த மே 18 முதல் சூரியன் மறையாமல் இருந்துவருகிறது என்று தெரியவந்துள்ளது.

இதே போல் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்த தீவில் சூரியனே உதிக்காது என்றும் அந்த ட்ரோம்சோ தீவில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.

மேலும் சூரியனே உதிக்காத அந்த மூன்று மாதங்களை “போலார் இரவுகள்"என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.

ட்ரோம்சோ தீவில் சுமார் 300 மக்கள் வசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நீண்ட பகல் மற்றும் நீண்ட இரவுகள் கொண்ட இத்தீவினை “கால நேரம் அற்ற தீவு” என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று ட்ரோன்சோ தீவின் மக்கள் நார்வே அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இனி வரும் ஜூலை 26 வரை, சூரியன் இந்த தீவில் மறையாது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments