Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து- அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (12:44 IST)
சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத டாட்டினம் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால், பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டது.

சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பூங்கா குயின்ஸ்லேண்ட். பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் விளையாடும் வண்ணம் பல வகை ராட்டினங்கள் அங்கே உள்ளன. அவற்றில் ஒரு ராட்டினத்தில் நேற்று விபத்து ஏற்பட்டது. இரும்புதூண் ஒன்றை மையமாக கொண்டு தொட்டில் போன்ற அமைப்பில் பயணிகளை மேலும் கீழும் கொண்டு போகும் அந்த ராட்டினத்தில் பழுது ஏற்பட்டது.

பயணிகள் தொட்டில் கீழே இறங்கி கொண்டிருக்கும்போது தரைக்கு மேலே சுமார் 7 அடி உயரத்தில் தொட்டில் அறுந்து விழுந்தது. இதனால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது என்றாலும் யாருக்கும் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மிக உயரத்தில் இருக்கும்போது அறுந்திருந்தால் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.

இந்த விபத்தினால் உடனடியாக குயின்ஸ்லேண்ட் பூங்கா இழுத்து மூடப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் பூங்காவை ஆய்வு செய்து பாதுகாப்பானது என அங்கீகரித்தால் மட்டுமே பூங்கா மறுபடி திறக்கப்படும் என உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments