Publish Date: Mon, 18 Sep 2017 (15:51 IST)
Updated Date: Mon, 18 Sep 2017 (15:56 IST)
சூடான் நாட்டில் அகதியாக வசித்து வரும் ஹோசனா அப்துல்லா என்ற 21 வயது மதிக்கதக்க பெண் தற்போது எல்கேஜி படித்து வருகிறார் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாட் என்னும் நாட்டை சேர்ந்த இவர் சூடனில் அகதியாக வசித்து வருகிறார். படிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால், தற்போது தனது 15 வயது மகளுடன் சேர்ந்து படித்து வருகிறார்.
இந்த வாய்ப்பை அவருக்கு UNHRC வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய ஹோசனா, நான் மற்ற பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் ஒரு காட்சி பொருளாக இருப்பது போல் உணர்ந்த்தேன்.
ஆனால், எனது நோக்கம் கல்வி கற்பது என்பதால் நான் என்னை சுற்றி நடப்பதை பெரிதாக எடுத்துகொள்வதில்லை என கூறியுள்ளார்.