Publish Date: Fri, 28 Jul 2017 (15:11 IST)
Updated Date: Fri, 28 Jul 2017 (15:18 IST)
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அதிகளவிலான அகதிகள் சட்ட விரோதமாக கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கின்றனர்.
ஐரோப்பாவை நோக்கி கடலில் ரப்பர் படகில் ப்யணத்தை மேற்கொண்ட அகதிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அகதிகள் பயணம் மேற்கொண்ட போது பாரம் தாங்காமல் படகிலிருந்த கர்ப்பிணி பெண், குழந்தைகள் உட்பட 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் சடலங்கள் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்டு அகதிகள் பயணித்த படகிலேயே மீண்டும் வைக்கப்பட்டது. மேலும், உயிருக்கு போராடிய 167 அகதிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.