Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டுக்குள்ள இருக்க சொன்னா சுத்திக்கிட்டு இருக்கீங்களா? – 5 பேர் சுட்டுக்கொலை!

வீட்டுக்குள்ள இருக்க சொன்னா சுத்திக்கிட்டு இருக்கீங்களா? – 5 பேர் சுட்டுக்கொலை!
, திங்கள், 6 ஏப்ரல் 2020 (10:28 IST)
ரஷ்யாவில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய நபர்களை ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு உலக அளவில் வேகமாக அதிகரித்து வருவதால் பல நாடுகள் முடங்கியுள்ளன. பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. அந்த வகையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள எலட்மா என்ற பகுதிக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியே வட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 31 வயது நபர் ஒருவரின் வீட்டருகே 4 ஆண்களும் ஒரு பெண்ணும் கூடி பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அவர்களை கலைந்து போக சொல்லியுள்ளார் அந்த நபர். ஆனால் அவர்களை அதை பொருட்படுத்தாததால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் துப்பாக்கியால் 5 பேரையும் சுட்டு கொன்றுள்ளார். இந்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 நிமிடத்தில் இவ்வளவு மின்சாரம் மிச்சமா? – அமைச்சரின் ஆச்சர்ய தகவல்!