Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கும்மி எடுத்த கள்ளக்காதலி புருஷன்: பக்காவா டிராமா போட்டும் சிக்கிய ஈபி ஆஃபிசர்!

Advertiesment
கும்மி எடுத்த கள்ளக்காதலி புருஷன்: பக்காவா டிராமா போட்டும் சிக்கிய ஈபி ஆஃபிசர்!
, சனி, 4 ஏப்ரல் 2020 (15:09 IST)
கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று அடிவாங்கிய மின்வாரிய ஊழியர், போலீசார் தாக்கியதாக கூறி நாடகமாடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
சேலம் மாவட்டம் மேட்டூரில் மின்வாரிய ஊழியராக பணிபுரியும் நபர் ஒருவர் கள்ளக்காதலின் வீட்டிற்கு சென்று அங்கு அந்த பெண்ணின் கணவனிடம் அடிவாங்கியதை மறைக்க ஊரடங்கு உத்தரவால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போலீஸ் தன்னை அடித்துவிட்டதாக சக மின்வாரிய அதிகாரிகளிடமும் மனைவியிடமும் நாடகமாடியுள்ளார். 
 
அந்த நபர் கூறியதை உண்மை என நம்பி அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து சங்கத்தின் மூலம் மின்வாரிய தலைவர் வரை புகாரை கொண்டு சென்றுள்ளனர் சக அதிகாரிகள். இந்த புகார் டிஎஸ்பி வரை செல்ல, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மின்வாரிய அதிகாரியின் நாடகம் வெட்ட வெளிச்சமாக, தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளும் கட்சி மீது சீறிய டிடிவி தினகரன்: காரணம் என்ன?