அதிபர் ஆட்சி முறைக்கு ஆப்பு; விரைவில் ஜனநாயக ஆட்சி..! – இலங்கையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (08:39 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க எதிர்கட்சி மசோதா அளித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயா அரசியல் சட்ட திருத்த மசோதாவை உருவாக்கியுள்ளது.

அதன்படி, இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழித்து, அதற்கு பதிலாக அரசியல் சட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஜனநாயக ஆட்சி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்தால் இலங்கையிலும் இந்தியா போலவே மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது தலைமை அமைச்சராக பிரதமர் செயல்படும் நிலை ஏற்படும். இது அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் தன்னிச்சையான முடிவுகளை அதிபர் எடுப்பதை இது தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments