Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி: கர்ப்பிணி உள்பட 13 அகதிகள் தமிழகம் வருகை!

refugees1
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (07:42 IST)
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி: கர்ப்பிணி உள்பட 13 அகதிகள் தமிழகம் வருகை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டில் இருந்து அகதிகளாக தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இலங்கை மக்கள் சென்று வருகின்றனர். 
 
ஏற்கனவே தமிழகத்திற்கு பல அகதிகள் வந்த நிலையில் தற்போது மீண்டும் 13 பேர் தமிழகத்தில் அகதிகளாக வந்துள்ளார்கள் என்றும் அவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் என்றும் கூறப்படுகிறது 
 
மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு படகுகளில் தனுஷ்கோடி வந்த அவர்களை ராமேஸ்வரம் போலீசார் மீட்டு அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை இலங்கையில் இருந்து 55 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து உள்ளார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: 3 பேர் மீது வழக்குப்பதிவு!