இனி இஷ்டத்திற்கு பதிவு செய்ய முடியாது: ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூபில் கட்டுப்பாடு

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (20:50 IST)
சமூக வலைத்தளங்களில் எந்த அளவுக்கு பயன் இருக்கின்றதோ, அதே அளவுக்கு ஆபத்தும் உள்ளது என்பதும் இதனை கட்டுப்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லை என்பதும் பலருக்கும் புரிந்திருக்கும். ஒரு கருத்துக்கு மாற்றுக்கருத்து கூறுபவர்களுடன் ஆக்கபூர்வமாக வாதிடாமல் உடனே கெட்ட வார்த்தையை பதிலாக அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி பெய்டு டிராக்கர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனை குதிரைகளை ஓட்டிவிட்டு போஸ்ட்டுகளை பதிவு செய்கின்றனர். குறிப்பாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன் தயாரிப்பாளருக்கே தெரியாத வசூல் கணக்கை பெய்டு டிராக்கர்கள் பதிவு செய்கின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை இதுகுறித்து சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்ட்டு வருகின்றன. இனி பொய் அல்லது தவறான தகவல் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகளை ஊக்குவிக்க மாட்டோம் என்றும் தவறான தகவல்கள் தருபவர்களின் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க ஆலோசனை செய்து வருவதாகவும் சமூக வலைத்தள நிர்வாகிகல் தெரிவித்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் 'தேவை இல்லை' என்று பரிந்துரைக்கும் பதிவுகள், வீடியோக்கள் அவர்களுக்கு அளிக்கப்படாது என்றும் சமூக வலைத்தளங்கள் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்.. பயந்துபோய் தீக்குளித்து உயிருக்கும் போராடும் மாணவி..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: 25 பேர் பலி; நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!

என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments