Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் பலி!

மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் பலி!
, வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:16 IST)
மெக்சிகோ நாட்டில் ஒரு மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள குவானாஜூவாடோ மாகாணம் அபாசியோ எல் ஆல்டோ நகரில் பிரபலமான மதுபான விடுதி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் கடந்த புதன் கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஒரு மர்ம கும்பல் புகுந்து திடீரென்று துப்பாக்கியால் சுட்டது.

இதில், மதுபான விடுதி பணியாளர்கள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், 2 பெண்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது முதல் வந்தே பாரத் ரயில்: மலர்கள் தூவி வரவேற்பு