Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரான், ஈராக்கில் கடுமையான நிலநடுக்கம் - மக்கள் கடும் பீதி

ஈரான், ஈராக்கில் கடுமையான நிலநடுக்கம் - மக்கள் கடும் பீதி
, ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (15:13 IST)
ஈரான், ஈராக் நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ஈராக் நாட்டின் பாக்தாத் நகர் மற்றும் ஈரான் எல்லையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
 
நிலநடுக்கம் காரணமாக  ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் பயத்தில் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
 
இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரணியை நேரடி ஒளிபரப்பு செய்ய பிளான் போடும் மு.க.அழகிரி