Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? சீமான் பரபரப்பு பேட்டி

Advertiesment
seeman
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் தனது பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடப் போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்றும் அந்த தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் எந்த மாநிலம் போனாலும் அதை பற்றி கவலையில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்