440 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவராக கருதப்படும் அவிலாவின் சைண்ட் தெரசா என்பவரின் சமாதியை காண கத்தோலிக் பக்தர்கள் திடீரென நீண்ட வரிசையில் நிற்பதால் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
1582-ம் ஆண்டில் இறந்த அவிலாவின் சைண்ட் தெரசா சமாதியை பார்க்க தினமும் சுமார் 1,00,000 பேர் கடந்த இரு வாரங்களாக வருகை தந்து கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
சமாதியில் காணப்படும் பகுதி சுமார் 1.3 மீட்டர் நீளம் கொண்டது. அதில் அவிலாவின் சைண்ட் தெரசா தலை மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இதயம் மற்றும் பிற உறுப்புகள் சில வெவ்வேறு திருத்தாலயங்களில் பாதுகாப்பாக உள்ளன.
16-ஆம் நூற்றாண்டின் தன்னிலை மறுசீரமைப்பு காலத்தில் ஸ்பெயின் பொற்காலத்தை பிரதிபலிக்கும் தெரசா ஆன்மீக வாழ்வையும் கடவுளுடன் தொடர்பையும் ஆராய்ந்தவர். அவரது எழுத்துக்கள் ஆன்மீகத்துக்கான ஆழமான கருத்துக்களாக மதிக்கப்படுகின்றன.
அவரை ஏற்றுக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். முன்னாள் ஸ்பானிஷ் படைத் தலைவர் பிரான்கோ அவரின் கையை ஒரு பழமையான நினைவுச் சின்னமாக வைத்திருந்தார்.
440 ஆண்டுகளுக்கு முன் இறந்த அவிலாவின் சைண்ட் தெரசா பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் எப்படி டிரெண்ட் ஆனார் என்பது புரியாத புதிராக உள்ளது