Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியர்களின் பாதுகாப்பிற்கு உறுதி அளித்த ரஷ்ய அதிபர் !

இந்தியர்களின் பாதுகாப்பிற்கு உறுதி அளித்த ரஷ்ய அதிபர் !
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:32 IST)
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்திருப்பதாக முக்கிய  தகவல் வெளியாகிறது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில்     நேற்று அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கின.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்து. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  உலக நாடுகள் யாரும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபரிடம் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி   உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்திருப்பதாக கிரம்ளின் மாளிகை  ரஷ்ய அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் போர்: புதுவை மாணவர்களை மீட்க முதல்வர் ரங்கசாமி கோரிக்கை