Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது போர்: - ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை

puthin
, வியாழன், 23 மார்ச் 2023 (18:56 IST)
ரஷ்யா அதிபர் புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என முன்னாள் ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனியில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து முன்னாள் ரஷ்ய அதிபர் கூறிய போது புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
உக்ரைன் போரின் போது குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு புதினை கைது செய்ய ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த நிலையில் ரஷ்யா முன்னாள் அதிபரின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் ஜெர்மனியிடையே போர் மூண்டால் அது உலகப்போராக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு காத்துக் கொண்டிருக்கிறோம்: ஓபிஎஸ் மகன் பிரதீப்