Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத போர் பயிற்சியில் ரஷ்யா; பீதியில் உக்ரைன்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (13:00 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் சமீப காலமாக அணு ஆயுத பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் அகதிகளாக வெளியேறும் சோகமும் நிகழ்ந்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. இதனால் உக்ரைனும் அவ்வபோது ரஷ்ய ராணுவம் மீது பதில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரஷ்ய ராணுவம் அணு ஆயுத போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போலந்து மற்றும் லித்துவேனியா இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பால்டிக் கடல் பகுதியில் அணு ஆயுதங்களை தாங்கி கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஸ்கேண்டர் ஏவுகணைகளை அனுப்பி பயிற்சி மேற்கொண்டுள்ளன.

இதேபோன்று கதிரியக்கம் மற்றும் ரசாயன வீச்சு ஆகிய தாக்குதல் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளதால் உக்ரைன் மீது அபாயகரமான ஆயுதங்களால் தாக்க ரஷ்யா திட்டமிடுகிறதா என்ற பதட்டம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments