Webdunia - Bharat's app for daily news and videos

Install App

180 பேரை கொன்று குவித்த ரஷ்ய விமானப் படைகள்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (18:36 IST)
சிரியாவில் ரஷ்ய நாட்டு விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 வெளிநாட்டினர் உள்பட 180 பேர் கொல்லப்பட்டனர்.


 


 
சிரியா நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து ஒவ்வொரு நகரமாக ராணுவத்தால் மீட்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் பிடியில் இருக்கும் கடைசி நகரை மீட்க சிரியா நாட்டு ராணுவ படைகள் உச்சக்கட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு துணையாக ரஷ்ய நாட்டு விமானப் படையும் தாக்குதலில் ஈடுபட்டது.
 
ரஷ்ய விமானப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்த 80 பேர் கொல்லப்பட்டனர். அல்பு கமால் நகரில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்த பயங்கரவாதிகளும் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 180 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள சிறு பகுதிகளையும் சிரியா அரசு மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments