Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 13-இல் நாடு முழுவதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

அக்டோபர் 13-இல் நாடு முழுவதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (18:11 IST)
தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் விலை நிர்ணைய முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 13-ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.


 
 
தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தினமும் விலை நிர்ணயம் செய்வதால் பல்வேறு சிக்கல்களை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்தித்து வருவதாகவும், விலை ஏற்றம் கடுமையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்தநிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த சங்கம் மும்பையில் நடத்திய ஆலோசனையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பெட்ரோலிய பொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கைவிட வேண்டும்.
 
பெட்ரோலியப் பொருட்களை நேரடியாக வீடுகளில் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிடுதல் வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியா விலையைக் கடைபிடிக்கும் விதமாக பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments