Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்… ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்… ரஷ்யா அறிவிப்பு!
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:26 IST)
உக்ரைன் மீது படையெடுப்பை மேற்கொண்டு வரும் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்த்துள்ள சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் ரஷ்யப் படைகளை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேயர், துணை மேயர் பதவிகள்: எந்த அடிப்படையில் தேர்வு? திமுக கணக்கு என்ன?