Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மாளிகை வேண்டாம், வீட்டில் இருந்தே பணி செய்கிறேன்: ரணில் விக்ரமசிங்கே

ranil
, திங்கள், 23 மே 2022 (11:40 IST)
பிரதமரின் ஆடம்பர மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே தான் பணி செய்யப் போவதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார் 
 
இலங்கை பிரதமராக சமீபத்தில் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்கே தங்குவதற்காக பிரதமர் மாளிகை தயாரானது. அலரி மாளிகை என்று கூறப்படும் பிரதமர் மாளிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் நிலையில் அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் தான் வீட்டிலிருந்தே பணி செய்யப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார் 
 
அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு தனக்கும் பொருந்தும் என்றும் கொழும்புவில் உள்ள வீட்டிலிருந்தே பணிகளை கவனிக்க போவதாகவும் அமைச்சர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!