Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிபணிந்த ராஜபக்சே: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகல்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (11:21 IST)
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பையொட்டி இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகுகிறார்.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமர் பதவிக்கு அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார்
இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த வழக்கில் ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்றது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் முடியவில்லை.  திடீரென பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மீண்டும் பாராளுமன்றம் இயங்கும் வரை ராஜபக்சேவே பிரதமராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ராஜபக்சே பதவி விலக தீர்ப்பளித்தது. அதன்படி ராஜபசே தனது ராஜினாமா கடிதத்தை சிறிசேனாவிற்கு இன்று அனுப்பியுள்ளார்.
 
நாளை மீண்டும் ரணில் விக்ரமசிங்க இலங்கை பிரதமராக பதவியேற்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments