Publish Date: Thu, 22 Nov 2018 (16:38 IST)
Updated Date: Thu, 22 Nov 2018 (16:47 IST)
இலங்கையில் வடமேற்கு பகுதியான மன்னாரில் யாருக் செல்லமுடியாத ஒரு கல்லறை இடத்தில் ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
ஒரு காலத்தில் போர் மையமாக இருந்த இந்த இடத்தில் இதற்கு முன் இதே போல பல எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இருபது ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இப்போரில் ஏராளமானோர் பலியாகினர்.
தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் வெளியாகி வருவதால் அப்பகுதியை விரிவாக தோண்ட வேண்டும் என இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.