Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் - இஸ்ரேல் போரில் அமெரிக்கா தலையிட வேண்டாம்: புதின் எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 20 ஜூன் 2025 (07:35 IST)
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் போர் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த போரில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஈரான் மற்றும் இஸ்ரேல் போரில் அமெரிக்க ராணுவம் தலையிட்டிருப்பதாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்க ராணுவம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இது ஆபத்தான ஒன்று என்றும், எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானில் இருக்கும் ஒரே ஒரு அணுமின் நிலையமான புஷேர் அணுமின் நிலையம் ரஷ்யாவால் கட்டி கொடுக்கப்பட்டது என்றும், அந்த அணுமின் நிலையத்தைதான் குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்கி வருவதாகவும் கூறப்படும் நிலையில், ரஷ்ய அதிபரின் எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் இந்த விஷயத்தில் எதிர்மறை கருத்துக்களை உடையதாக இருப்பதால் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments