Publish Date: Tue, 09 Apr 2019 (12:12 IST)
Updated Date: Tue, 09 Apr 2019 (12:15 IST)
அபுதாபியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேனிலவின் போது கணவனுடன் ஏற்பட்ட தகராறால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.
அபுதாபியை சேர்ந்த இளம்பெண் இருவருக்கு ஈரானை சேர்ந்த வாலிபருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் தேனிலவுக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த நபர் தனது மனைவியிடம் டென்ஷனாக நடந்து கொண்டதாக தெரிகிறது. சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபப்படுவதும், திட்டுவதுமாக இருந்துள்ளார். அதுபோக மனைவிடம் பணம் வாங்கியே அவர் செலவு செய்துள்ளார்.
இதனால் கடுப்பான அவரது மனைவி, ஊர் திரும்பியதும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.