Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிரிழந்த கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்! ஆச்சரிய தகவல்

உயிரிழந்த கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்! ஆச்சரிய தகவல்

Mahendran

, திங்கள், 22 ஜூலை 2024 (15:32 IST)
பல சீன நாட்டில் உயிரிழந்த கற்பனையின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் போராடி காப்பாற்றி உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
மருத்துவத்துறை தற்போது நவீனமயமாகிவிட்ட நிலையில் எதுவும் சாத்தியம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாலஸ்தீன நாட்டில் கர்ப்பிணி ஒருவர் திடீரென உயிரிழந்தார். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மருத்துவர்களை கேட்டுக் கொண்ட நிலையில் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
 
அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்கள் குழந்தை பேச்சுமூச்சின்றி இருந்த நிலையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனை அடுத்து அந்த குழந்தை உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.
 
நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவரது குழந்தை மட்டும் மருத்துவர்கள் காப்பாற்றி கொடுத்ததை அடுத்து கர்ப்பிணி குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 
இந்த தாக்குதலில் கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்ததாகவும் மொத்தம் 24 பேர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்..!