Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவு

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (11:56 IST)
பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
பப்புவா நியூ கினியா தீவின் தெற்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் இன்று காலை 3.45 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. பின்பு சிறிது நேரம் கழித்து அங்கு நிலைமை சீரானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து பப்புவா நியூ கினியா அரசு இன்னும் தகவல் எதுவும்  வெளியிடவில்லை. 
 
இந்த நிலநடுக்கமானது எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டு இருக்கிறது என ஆமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments