பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவு

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (11:56 IST)
பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
பப்புவா நியூ கினியா தீவின் தெற்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் இன்று காலை 3.45 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. பின்பு சிறிது நேரம் கழித்து அங்கு நிலைமை சீரானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து பப்புவா நியூ கினியா அரசு இன்னும் தகவல் எதுவும்  வெளியிடவில்லை. 
 
இந்த நிலநடுக்கமானது எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டு இருக்கிறது என ஆமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் இலங்கை பெண்ணிடம் இந்திய பான் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்..!

விஜய்யை விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவிட்டவர் மீது தாக்குதல்.. 4 பேர் கைது..!

கோவில் கருவறைக்குள் செல்ல மறுத்த கிறிஸ்துவ அதிகாரி பணிநீக்கம் செல்லும் - உச்ச நீதிமன்றம்

இனிமேல் அவசர வழக்கு என எதுவும் கிடையாது: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments