Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

Siva
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (19:18 IST)
பாகிஸ்தானில் உள்ள வடமேற்கு மாகாணத்தில்  இன்று ஒரு மசூதியில் தொழுகை நடைப்பெற்று கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் தொழுகை செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
 
இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த தாக்குதல் குறிப்பிட்ட ஒருவரை கொல்லும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த நபர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments