நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென விழுந்த விமானம்.. அமெரிக்காவில் பயங்கர விபத்து..!

Mahendran
திங்கள், 13 அக்டோபர் 2025 (12:49 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹிக்ஸ் விமான நிலையத்திற்கு அருகே, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
 
நேற்று பிற்பகலில்  சிறிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 18 சக்கர டிரக் மற்றும் பிற வாகனங்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
 
இந்த விபத்தின் காரணமாக, டிரக் மற்றும் அருகிலிருந்த கார்கள் உட்பட பல வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.
 
தீயணைப்பு படையினர் நடத்திய மீட்பு பணியில், தீயில் எரிந்த நிலையில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
 
இந்தத் துயர விபத்து குறித்து அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கியவர்? தவெக வழக்கில் வரும் அஜய் ரஸ்தோகி யார்?

எது போர் நடக்குதா..? இதோ வந்துட்டேன்! ஆப்கன் - பாகிஸ்தான் போரில் நுழையும் ட்ரம்ப்!

2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி.. என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்ற காவல்துறை..!

கரூர் வழக்கில் திருப்பம்.. தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை.. செல்வராஜ்

சிபிஐக்கு மாறியது கரூர் வழக்கு! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments