Publish Date: Mon, 18 Dec 2017 (10:21 IST)
Updated Date: Mon, 18 Dec 2017 (10:23 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்ள பிலிரான் தீவுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி 26 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் அவர்களை பணி நடைபெற்றுவருகிறது. மேலும் பலத்த மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
webdunia
Publish Date: Mon, 18 Dec 2017 (10:21 IST)
Updated Date: Mon, 18 Dec 2017 (10:23 IST)