Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஜராத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது?

குஜராத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது?

குஜராத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது?
, திங்கள், 18 டிசம்பர் 2017 (10:15 IST)
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் கண்காணித்து வரும் குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதற்கான வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
 
குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டு வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9-ம் தேதி முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14-ம் இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
 
இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேத்தில், நடைபெற்றத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்த வாக்குகளை எண்ணும் பணி தற்போழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
 
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 104 இடங்களில் பாஜக முன்னிலையிலும், 76 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளன. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலில் பாஜக 38 இடங்களிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
 
இந்நிலையில் குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் ஹர்திக் பட்டேல் பாஜக மீது அதிரடி குற்றச்சட்டு ஒன்றை வைத்துள்ளார். குஜராத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓகி புயலால் நிலைகுலைந்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி நாளை குமரிக்கு வருகை