சவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் - டீசல் விலை!

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (10:53 IST)
சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது அடத்தப்பட்ட தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை உயரும் என தெரிகிறது. 
 
சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
சர்வதேச அளவி சவுதி அரேபியாதான் அதிகளவு கச்ச எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக நாள் ஒன்றிற்கு உலகின் மற்ற நாடுகளுக்கு சவுதி 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. 
மொத்த எண்ணெய் வள் நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு சவுதி அரேபியாவில் இருந்துதான் நடைபெறுகிறது. உலகநாடுகளில் சவுதியிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமது செய்வதில் இந்தியாவும் ஒன்று. 
 
இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட இந்த ஆலைதான் உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு சுமார் 7 மில்லியன் லிட்டர் எண்ணெய் அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. 
இந்த ஆலையின் மீதான தாக்குதலால் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளதாம். எனவே, கச்சா எண்ணெய்யின் விலை 20% வரை அதிகரிக்க கூடுமாம். அப்படி கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பெட்ரோ மற்றும் டீசல் விலையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதோடு ஏமன் நாட்டின் அதிபர் மன்சூர் ஹைதியை எதிர்த்து ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படை போரிட்டு வருகிறது. மன்சூர் கைதிக்கு சவுதி ஆதரவாக செயல்பட்டு வருவதால் ஹவுத்தி கிளர்ச்சிப் படை இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்? வானிலை எச்சரிக்கை..!

பெங்களூரு-ஓசூர் மெட்ரோ இணைப்பு திட்டம் சாத்தியமில்லை.. கைவிரித்த கர்நாடக அரசு..!

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments